ஐ.பி.எல். தொடரின் முதல் எலிமினேட்டர் போட்டி : கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
Oct 12 2021 8:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். தொடரின் முதல் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் எனப்படும் வெளியேற்றுதல் சுற்றில், புள்ளிப்பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த அணிகளான, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல்லும், கோலியும் களமிறங்கினர். பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.
139 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை எட்டும் முனைப்புடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19 புள்ளி 4 ஓவரில், 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது.
எலிமினேட்டர்' போட்டியில் வென்ற கொல்கத்தா அணி, நாளை நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில், டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இதில் வெல்லும் அணி, வரும் 15-ம் தேதியன்று துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில், சென்னை அணியை சந்திக்கவுள்ளது.