ஹாக்கி இந்தியா, அரசுடன் ஆலோசித்திருக்க வேண்டும் - அனுராக் தாகூர்
Oct 10 2021 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் போன்ற சர்வதேச விளையாட்டுப்போட்டியிலிருந்து விலகுவதற்கு முன்பு, ஹாக்கி இந்தியா அமைப்பு, அரசுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக் தாகூர் தெரிவித்தார். இந்தியாவில் திறமையான ஹாக்கி வீரர்களுக்கு பஞ்சமில்லை என்றும், விளையாட்டு அமைப்புகள் தன்னிச்சையாக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கிரிக்கெட்டைப் போலவே, பிற விளையாட்டுகளையும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்த முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.