ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி - பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த மும்பை அணி
Oct 9 2021 10:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்றா 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர்கள், அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதேசமயம் விக்கெட்களையும் பறிக்கொடுத்து மும்பை அணி சற்று தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தனர்.
236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அபார இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். பின்னர் களமிறங்கிய அந்த அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் மும்பை பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்களை பறிக்கொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், பிளே ஆப் சுற்றுக்குள் செல்லும் தகுதியை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. ஏற்கனவே ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்குள் செல்லும் தகுதியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு லீக் ஆட்டத்தில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த சூழலில், நாளை முதல் இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்றுகள் தொடங்குகின்றன. அதன்படி நாளை நடைபெறும் முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணி, மற்றொரு தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் பலபரீட்சை மேற்கொள்கிறது.