ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 52-வது லீக் ஆட்டம் : 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி
Oct 7 2021 11:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் உள்ள சேக் சாயீத் மைதானத்தில் நடைபெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி, நிதானமாக விளையாடியது. அடுத்தடுத்து விக்கெட்களை பறிக்கொடுத்தாலும், மறுபுறம் ஐதராபாத் அணியின் சில வீரர்கள் பொறுமையாக விளையாடி ரன்களை குவித்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள், அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். அதேசமயம், தேவ்தத் பட்டிக்கலுடன், மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சீரான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இறுதியாக பெங்களூரு அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்களில் சென்னை-பஞ்சாப், கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.