இந்தியாவில் பிரபலமடையும் கெட்டில் பெல் விளையாட்டு : தேசிய அளவிலான போட்டிக்கு தமிழக வீரர்கள் தேர்வு
Sep 20 2021 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவின் தேசிய விளையாட்டான கெட்டில் பெல் விளையாட்டு, மைசூரில் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ளது. தேசிய அளவில் நடைபெறும் இந்த விளையாட்டிற்கு ஆன் லைன் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கெட்டில் பெல் விளையாட்டு தற்போது இந்தியாவிலும் பிரபலமடைந்து வரும் நிலையில், இந்த விளையாட்டை விளையாட பலரும் ஆர்வம் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வரும் 30ம் தேதி மைசூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திருச்சியில் தமிழ்நாடு கெட்டில் பெல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேர்வு முகாம் நடைபெற்றது. நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் நடைபெற்ற இந்த தேர்வு முகாமில், 125 வீரர்கள் பங்கேற்றனர்.