ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகல் : பேட்ஸ்மேனாக அணிக்கு பங்களிப்பை முழுமையாக கொடுக்கப்போவதாக அறிவிப்பு
Sep 20 2021 7:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல் 2021 தொடருக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராத் கோலி அறிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி, டெஸ்ட் அணி, டி-20 என அனைத்து அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்துவந்தார். அதைத்தவிர ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் விராட் கோலி இருந்துவருகிறார். இருப்பினும், கோலி தலைமையில் பெங்களூரூ அணி இதுவரையில் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இந்தநிலையில், டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராத் கோலி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைப்பளு முக்கியம் என்பதை உணர்ந்துள்ளதாலும் கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட்களிலும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன் என கூறியுள்ளார்.