ஆன்லைன் மூலம் 13 மணிநேரம் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி : சாதனையை மலேசிய புக்ஆப் ரெக்கார்ட் அங்கீகாரம்
Aug 17 2021 8:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிலம்பக் கலை குறித்து ஆன்லைன் மூலம் தொடர்ந்து 13 மணி நேரம் நடைபெற்ற சிலம்ப நிகழ்ச்சி, சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
மலேசியா சிலம்ப கோர்வை சிலம்ப ஆசிரியர் கவியரசி சங்கர் முயற்சியில், மலேசிய சிலம்ப கோர்வை நிறுவனர் சிலம்ப மாஸ்டர் அன்பழகன் முன்னிலையில், சிலம்ப வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும், சிலம்பக் கலையினை கற்கும் மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி தொடர்ந்து 13 மணிநேரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் இருந்து 150- க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று சிலம்பத்தில் தனித்திறனை வெளிப்படுத்தினர். இந்தியாவில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட சாதனை நிகழ்வினை மலேசிய புக்ஆப் ரெக்கார்டின் நடுவர்கள் தொடர்ந்து கண்காணித்து சாதனை நிகழ்வினை அங்கீகரித்தனர், இதற்கான சான்றிதழானது இன்று மலேசியாவில் வழங்கப்படவுள்ளது.