ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியா முன்னேற்றம் - இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி அடுத்த சுற்றுக்கு தகுதி
Jul 24 2021 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பில் தொடரொல் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அசத்தி வருகின்றனர். அந்த வகையில், மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி, சுவீடனின் Linda Bergstroem-வை எதிர்கொண்டார். இதில் முகர்ஜி 4க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
முன்னதாக பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாட்விக் சாய்ராஜ், செட்டி சிராக் ஜோடி, தைபே அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.