ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று - இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி
Jul 24 2021 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், டேபிள் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, Britain வீராங்கனை Tin Ho-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், அபாரமாக விளையாடிய பத்ரா, பிரிட்டன் வீராங்களையை திணறடித்தார். இறுதியில், 11-க்கு 7, 11-க்கு 6, 12-க்கு 10, 11-க்கு 9, 4-க்கு பூஜ்ஜியம் என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்கு மனிகா பத்ரா முன்னேறினார்.