டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானுவுக்கு பிரதமர் வாழ்த்து - ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும் என பெருமிதம்
Jul 24 2021 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக்கில், பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் 49 கிலோ பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சிகரமான தொடக்கமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மீராபாய் சானுவின் அபாரமான திறமையைக் கண்டு நாடே பூரிப்படைவதாகக் குறிப்பிட்டுள்ளார். மீராபாய் சானுவுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, ஒவ்வொரு இந்தியரிடையே உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.