ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டி - இந்திய வீரர் சாய் பிரனீத் முதல் சுற்றிலேயே தோல்வி
Jul 24 2021 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் Sai Praneeth முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்தியா சார்பில் Sai Praneeth, இஸ்ரேல் வீரர் Zilberman-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு வீரர்களும் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று முன்னிலைப்பெற்றனர். இஸ்ரேலிய வீரரின் அதிரடியால் Praneeth திணறினார். இறுதியில், 21-க்கு 17, 21-க்கு 15 என புள்ளி கணக்கில் Sai Praneeth, இஸ்ரேலிய வீரரிடம் தோல்வியடைந்தார்.