துப்பாக்கி சுடுதல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் சவுரப் சவுத்ரி - 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தகுதிச் சுற்றில் 586 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்
Jul 24 2021 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக்கில், ஆடவருக்கான துப்பாக்கிச்சுடும் போட்டியில், இந்திய வீரர் Saurabh Chaudhary இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீட்டர் Air Pistol துப்பாக்கிச்சுடும் போட்டியில், இந்தியா சார்பில் Saurabh Chaudhary, Abhishek Verma ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், சிறப்பாக செயல்பட்ட Saurabh Chaudhary, 586 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தினார். இதன்மூலம், 8 வீரர்கள் பங்கேற்கும் பதக்கத்திற்கான இறுதிச்சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.
ஆனால், Abhishek Verma 575 புள்ளிகள் மட்டுமே பெற்று 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை அவர் தவறவிட்டார்.