டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா முதல் வெற்றி - நியூஸிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது
Jul 24 2021 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான ஹாக்கி போட்டியில், இந்திய அணி, நியூஸிலாந்தை தோற்கடித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியில், மன்பிரீத் சிங் தலைமையில் 18 பேர் கொண்ட ஆடவர் அணியும், ராணி ராம்பால் தலைமையில் 18 பேர் கொண்ட மகளிர் அணியும் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில், 'A' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய ஆடவர் அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இப்போட்டி இன்று காலை நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய வீரர்களின் அபார ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் நியூஸிலாந்து வீரர்கள் திணறினர். இறுதியில், இந்திய அணி, 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் ஹாமன்பிரீத் சிங் 2 கோள்கள், ஆர்.பி.சிங் ஒரு கோல் அடித்து வெற்றிக்கு உதவினர்.