டோக்கிய ஒலிம்பிக் வில்வித்தை போட்டி - இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி
Jul 24 2021 2:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கிய ஒலிம்பிக்கில், வில்வித்தை போட்டியில், இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில், வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி முன்னேறியது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், இந்திய ஜோடி, தென்கொரியாவின் An San - Kim Je Deok இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி, 2-க்கு 6 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய இணையிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.