ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் - மாலை 4.30 மணிக்கு தொடங்கும் கண்கவர் விழாவை தொடங்கி வைக்கிறார் ஜப்பான் மன்னர்
Jul 23 2021 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்தியா சார்பில் 120-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் பங்கேற்கவுள்ள இவர்களில் பெரும்பாலானோருக்கு பதக்கம் பெறும் வாய்ப்பு உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன், துப்பாக்கிச் சுடுதல், குத்துச்சண்டை, மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இவர்களில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு, இம்முறையும் பதக்கம் பெறும் வாய்ப்புள்ளது. 6 முறை உலகச் சாம்பியனான மேரிகோம், குத்துச்சண்டைப் போட்டியில், 51 கிலோ எடைப் பிரிவில், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். பஜ்ரங் பூனியா, மல்யுத்தப் போட்டியில், 65 கிலோ எடைப் பிரிவில் பதக்கம் வெல்வார் என இந்திய மக்கள் எதிர்பார்க்கின்றனர். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், மானு பாகெர், தங்கம் வென்று வருவார் என கணிக்கப்பட்டுள்ளது. இவர் உலகப் போட்டிகளில் மட்டும் 9 தங்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இதேபோல், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சவுரப் சவுத்ரிக்கும், பதக்க வாய்ப்பு உள்ளது. உலகக் கோப்பைப் போட்டிகளில் 8 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்று குவித்துள்ளார். குத்துச்சண்டைப் போட்டியில் 25 வயதான அமித் பன்ஹால், 52 கிலோ எடைப் பிரிவில் களம் காண்கிறார். காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள இவர், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களைத் தவிர பளு தூக்கும் வீராங்கனை மீராபாய், உலகின் நம்பர் ஒன் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல் - மனிகா பத்ரா உள்ளிட்டோரும் பதக்கங்களை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.