டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம் : மகளிருக்கான சஃப்ட்பால் போட்டியில் ஜப்பான் வெற்றி - அமெரிக்கா, ஆஸி. அணிகளும் வெற்றி
Jul 23 2021 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற softball போட்டியில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்க உள்ள நிலையில், மகளிருக்கான பேஸ்பால், கால்பந்து, softball உள்ளிட்ட போட்டிகள் நேற்றே தொடங்கி விட்டன. நேற்று மூன்று ஓபனிங் ரவுண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், முதல் ஆட்டத்தில், ஜப்பான் அணியை, மெக்ஸிகோ எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில், 8 இன்னிங்ஸ்கலில் ஜப்பான் வீராங்கனைகள் அபாரமாக விளையாடி, 3 ரன்கள் எடுத்து, மெக்ஸிகோவை தோற்கடித்தனர்.
2-வது போட்டியில், அமெரிக்கா - கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் அமெரிக்க வீராங்கனைகளின் அனல் பறக்கும் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் எதிரணி வீராங்கனைகள் திணறினர். 7 இன்னிங்ஸ்களில், அமெரிக்க அணி ரன் எடுத்து, கனடாவை தோற்கடித்தது. 3-வது ஆட்டத்தில், இத்தாலி அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.