இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி : கொழும்பு மைதானத்தில் இன்று பலபரீட்சை
Jul 23 2021 8:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி மிரட்டல் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. மூன்றாவது போட்டியையும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.