டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகல தொடக்கம் : உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்பு
Jul 23 2021 8:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளன. அதன் அடையாளமாக டோக்யோவில் ஐந்து வளையங்களின் வடிவத்தில் விமானங்கள் பறந்து சாகசம் புரிந்தன.
ஜப்பான் தலைநகர் டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளன. ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் ஒலிம்பிக்கின் சின்னமான ஐந்து வளையங்களை ஜப்பான் தற்காப்பு விமானப் படையினர் வரைந்து சாகசம் புரிந்தனர். ஜெட் விமானங்களில் பறந்தவாறே இந்த வளையங்களை வரையும் முயற்சியில் விமானங்கள் ஈடுபட்டன. தொடங்கவிழாவின் போது ஒலிம்பிக் வளையங்களின் நிறங்களுக்கு ஏற்ப, பல வண்ணங்களில் இந்த வளையங்களை விண்ணில் வரையும் முயற்சியை அந்நாட்டு தற்காப்பு விமானப் படையினர் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.