இந்தியா - இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி : கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நாளை நடைபெறுகிறது
Jul 22 2021 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் நாளை நடைபெறுகிறது.
இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி, 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் நாளை நடைபெறுகிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. மூன்றாவது போட்டியையும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.