தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு
Jul 22 2021 10:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பை காட்டுக் காலனியை சேர்ந்த தனுஷ்குமார், 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிலம்பம் கற்று வரும் அவர், கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார். கோவாவிலிருந்து சென்னைக்கு திரும்பிய தனுஷ்குமாருக்கு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், தனுஷ்குமாரை, அப்பகுதி மக்கள், திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.