விம்பிள்டன் - ஒலிம்பிக் தொடர்களில் இருந்து ரஃபேல் நடால் விலகல் : உடலுக்கு ஓய்வு தேவைப்படுவதாக அறிவிப்பு
Jun 18 2021 9:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உடலுக்கு ஓய்வு தேவைப்படுவதால், விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் ஒலிம்பிக் தொடர்களில் இருந்து விலகுவதாக ஸ்பெயினின் ரஃபேல் நடால் அறிவித்துள்ளார்.
வரும் 28-ம் தேதி விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 23-ம் தேதி, ஜப்பானில் ஒலிம்பிக் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், ஸ்பெயினின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால், இந்த இரு தொடர்களில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து சர்வதேசடென்னிஸ் தொடர்களில் பங்கேற்று விளையாயடிதால், உடலுக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும், நீண்ட நாட்கள் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு விளையாட வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாலும், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து தமது அணிக் குழுவிடம் ஆலோசனை செய்தபோது, அவர்களும் தான் எடுத்த முடிவு சரி என தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட ரஃபேல் நடேல், விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்காததற்கு, ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.