ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக ரத்து - அணி வீரர்கள் உள்ளிட்டோருக்கு தொற்று உறுதியானதை அடுத்து பி.சி.சி.ஐ. நடவடிக்கை
May 4 2021 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
கொரோனா 2-வது அலையால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி விநியோக குறைபாடு என நாடு திணறிக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்குகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளன. இதனால் சிறு வியாபாரிகள், பணிக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும், கடைகள், தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டுள்ள அதே சூழலில், இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மட்டும் எந்த வித தடையுமின்றி நடைபெற்று வந்த நிலையில், ஐ.பி.எல். தொடரை ரத்து செய்யவோ அல்லது ஒத்தி வைக்கவோ பி.சி.சி.ஐ.க்கு உத்தரவிடக் கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பி.சி.சி.ஐ துணைத் தலைவர் திரு. ராஜிவ் சுக்லா அறிவித்துள்ளார்.