சிலம்பம் சுழற்றி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவிகள்
Apr 20 2021 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தனியார் கல்லூரி மாணவிகள் 100 க்கு மேற்பட்டோர், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு மணிநேரம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தனர். கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மகளிர் கலைக்கல்லூரியுடன் ஈரோடு சிலம்பம் கமிட்டி மற்றும் நோபல் சாதனை புத்தக நிறுவனம் இணைந்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று, தொடர்ந்து ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர். இந்நிகழ்வை நோபல் சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.