ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் : 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
Apr 20 2021 7:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
மும்பையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களைக் குவித்தது. 189 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியினர், சென்னை அணியினரின் நேர்த்தியான பந்து வீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து, 143 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதன்மூலம், 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.