தேசிய அளவில் வில்வித்தை போட்டிக்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த 19 மாணவர்கள் தகுதி
Apr 16 2021 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய அளவில் வில்வித்தை போட்டிக்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த 19 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். சேலத்தை அடுத்த ஏற்காட்டில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் என பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், மயிலாடுதுறை மாவட்ட வில்வித்தை சங்கத்தை சேர்ந்த 25 போட்டியாளர்களில் 19 பேர் தகுதி பெற்றனர். இவர்கள் அனைவரும், கர்நாடகாவில் உள்ள கூர்க் மாவட்டத்தில் நடைபெறும் தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா, பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.