இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தத்திற்கான பட்டியலை, பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு, வருடாந்திர ஊதியம் வழங்கும் வகையில், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தத்திற்கான பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
7 கோடி ரூபாய் ஊதியத்திற்கான A ப்ளஸ் பிரிவில், கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜாஸ்பிரிட் பும்ரா ஆகிய 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.
5 கோடி ரூபாய் ஊதியத்துக்கான "A" பிரிவில், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ரஹானே, கே.எல். ராகுல், ஷிகார் தவான், முகம்மது ஷாமி, இசாந்த் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதனிடையே, 3 கோடி ரூபாய் ஊதியத்திற்கான "B" பிரிவில், விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், மயங்க் அகர்வால், புவனேஸ்குமார் மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக பந்துவீசிய சார்துல் தாக்கூரும் இடம்பெற்றுள்ளார்.
ஒரு கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படும் பட்டியலில், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சஹார், ஹனுமா விஹாரி, அக்சர் பட்டேல், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சஹால் மற்றும் புதிய முகங்களாக சுப்மான் கில் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.