மும்பையில் நடைபெற்ற, ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி
Apr 13 2021 6:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் நடைபெற்ற, ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், பீல்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களைக் குவித்தது. தமிழகத்தின் ஷாருக்கான், இப்போட்டியில் அறிமுகம் ஆனார். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன், ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மனம் தளராமல் போராடி, ஐ.பி.எல். அரங்கில் 3-வது சதம் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.