ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி
Apr 12 2021 7:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.
14-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராணா 85 ரன்கள் அடித்தார். பந்து வீச்சை பொருத்தவரை ரஷித் கான், முகம்மது நபி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில், கேப்டன் டேவிட் வார்னர் 3 ரன்னிலும், சகா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மணிஷ் பாண்டே மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பேர்ஸ்டோவ் 55 ரன்களும், மணிஷ் பாண்டே 61 ரன்களும் எடுத்தனர். முடிவில் ஐதராபாத் அணி, 5 விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.