சென்னையில் நடைபெறும் தென்மண்டல அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி - 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
Mar 27 2021 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்மண்டல அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுவோர் சங்கம் மற்றும் சென்னை ரைஃபிள் கிளப் சார்பில், 12வது தென்மண்டல Short Gun துப்பாக்கிச்சுடுதல் போட்டி, சென்னை செங்குன்றம் அருகே அலமாதியில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 300க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஜுனியர், சீனியர், மூத்தோர் என பிரிக்கப்பட்டு, ஸ்கீட், டபுள் டிராப், டிராப் ஆகிய பிரிவுகளில் போட்டியிடுகின்றனர். தென்மண்டல அளவிலான இப்போட்டியில் தேர்வாகும் வீரர், வீராங்கனைகள், தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.