சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று - மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் தகவல்
Mar 27 2021 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தான் மேற்கொண்ட போதிலும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சிறிய அறிகுறிகளுடன் தன்னைதானே வீட்டில் தனிமைப்படுத்திகொண்டுள்ளதாக கூறியுள்ள சச்சின், தனது குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.