கரூரில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி : சாம்பியன் பட்டம் வென்ற மதுரை அணி
Mar 8 2021 7:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், மதுரை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கரூர் டெக்ஸிடி கூடைப்பந்து கழகம் மற்றும் கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கு கூடைப்பந்து போட்டி, கடந்த 4ஆம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கரூர், சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டன. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், சேலம் அணியை 95 - 83 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து மதுரை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு ரொக்கப்பரிசு 25 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பை வழங்கப்பட்டது.