உலக மகளிர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு வர்மக்கலை பயிற்சி : களறி வர்மக்கலை அடிமுறை பயிற்சியை கற்றுக் கொண்ட மாணவர்கள்
Mar 7 2021 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக மகளிர் தின விழாவையொட்டி கும்பகோணம் அருகே உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு களறி மற்றும் வர்மக்கலை அடிமுறை பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
ஆயக்கலைகளில் ஒன்றான தற்காப்பு கலைகளில் களறி, வர்மக்கலை மற்றும் அடி முறை கலைகளை கன்னியாக் குமரி மாவட்டத்தை சேர்ந்த உலக லெமூரியா வர்மக்கலை சங்கத்தினர் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். கும்பகோணம் அருகே உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, களறி, சிலம்பம், வர்மக்கலை மற்றும் அடி முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் உலக லெமூரியா வர்மக்கலை சங்கத்தினர் பங்கேற்று பயிற்ச்சி அளித்தனர்.