IPL கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் 9-ம் தேதி சென்னையில் தொடக்கம் - இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
Mar 7 2021 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
14-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர், வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 14-வது Indian Premier League 20 ஓவர் கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் 9-ம் தேதி சென்னையில் தொடங்கும் என்றும், முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை - பெங்களூரு அணிகள் மோத இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய 6 இடங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் என்றும், உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள நரேந்திர மோடி மைதானத்தில், பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் மற்றும் மே மாதம் 30-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, பார்வையாளர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.