IPL கிரிக்‍கெட் போட்டிகள் அடுத்த மாதம் 9-ம் தேதி சென்னையில் தொடக்‍கம் - இந்தியக்‍ கிரிக்‍கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

Mar 7 2021 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

14-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர், வரும் ஏப்ரல் மா‌தம் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில், ந‌டப்பு சாம்பியன் மும்பை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 14-வது Indian Premier League 20 ஓவர் கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் 9-ம் தேதி சென்னையில் தொடங்கும் என்றும், முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை - பெங்களூரு அணிகள் மோத இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய 6 இடங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் என்றும், உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள நரேந்திர மோடி மைதானத்தில், பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் மற்றும் மே மாதம் 30-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, பார்வையாளர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00