கரூரில் மாநில அளவில் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி - 30 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு
Mar 6 2021 10:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் மாநில அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டி துவங்கி நடைபெற்றுவருகிறது.
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெறும் போட்டி முற்றிலும் நாக் அவுட் முறையில் 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடி வருகின்றன. கரூர் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் கரூர் டெக்ஸ் சிட்டி சார்பில் 5 ஆண்டாக நடைபெறும் இந்த போட்டியினை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட உள்ளன.