முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பா.ஜ.க.வில் இணைய திட்டமா? - பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியின் மூலம் சேர இருப்பதாக தகவல்
Mar 4 2021 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குவங்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் தலைவர் கங்குலி பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
மேற்குவங்கத்தில் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில், மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி பொறுப்பேற்றார். கங்குலிக்கு அனைத்து வகையிலும் செல்வி மம்தா ஆதரவு அளித்துவந்தார். கங்குலிக்கு அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டபோதும், முதலமைச்சர் செல்வி மம்தா, மருத்துவமனைக்கு நேரடியாக சென்று உடல்நலம் விசாரித்தார்.
இந்த சூழலில், இதுவரை எந்தக்கட்சியிலும் இணையாத கங்குலி, பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நியமிக்கப்பட்டபின், பா.ஜ.க.வுடன் இணைத்து பேசப்பட்டார். இந்நிலையில், கங்குலி பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் வரும் 7-ம் தேதி பிரதமர் திரு. மோடி தலைமையில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பிரதமர் திரு. மோடி முன்னிலையில் கங்குலி பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.