கியூப் விளையாட்டில் உலக சாதனை படைத்த 2-ம் வகுப்பு மாணவர்
Mar 3 2021 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில், 2-ம் வகுப்பு மாணவர் ஒருவர், கியூப் விளையாட்டில் முந்தைய உலக சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார்.
அந்தோணியார்புரத்தை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவர் அட்ரியல், கியூப் விளையாட்டில் சிறந்து விளங்கி வருகிறார். இந்த மாணவர், மிரர் கியூப், பிரமிட் கியூப், ரூபிக் கியூப் ஆகிய மூன்றையும் 3 நிமிடம் 4 வினாடிகளில் செய்து, இதற்கு முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார். நோபல் உலக சாதனை புத்தகம், இந்த சாதனையை அங்கீகரித்து, மாணவர் அட்ரியலுக்கு விருது வழங்கி உள்ளது. இந்த விருதை, சாதனை மாணவருக்கு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் திரு.சரத்குமார் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.