பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் - ஷர்துல் தக்கூர் அபார ஆட்டம் - இருவருமே அரை சதம் அடித்ததால் உயர்ந்தது அணியின் ஸ்கோர்
Jan 17 2021 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிஸ்பனில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுடனான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 336 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியின் 3ம் நாளான இன்று 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. சிறப்பாக விளையாடி கொண்டிருந்த புஜாரா 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து கேப்டன் ரஹானேயும் 37 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா நெருக்கடிக்கு உள்ளானது. எனினும், மறுமுனையில் மயங்க் அகர்வால் கவனமுடன் விளையாடி ரன்களை சேர்த்தார். உணவு இடைவேளைக்கு பிறகு அவரும் மேற்கொண்டு ரன் எடுக்காமல் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்த்தும் வெளியேறியதால் இந்தியா நெருக்கடிக்கு உள்ளானது. ஆனால் அதன் பின் ஜோடி சேர்ந்த தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தரும், மற்றொரு ஆல்ரவுண்டர் ஷர்துல் தக்கூரும் சரிவை தடுத்து நிறுத்தினர். அதுமட்டுமின்றி ரன்களையும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர். முடிவில் இந்தியா 336 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 33 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.