பிரிஸ்பெனில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் - அறிமுக போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை சாய்த்த தமிழக வீரர் நடராஜன்
Jan 15 2021 2:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிஸ்பெனில் நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்திருந்தது. அறிமுக போட்டியில் விளையாடிய தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பென் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்திருந்தது. அறிமுக போட்டியில் விளையாடிய தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரும் முதல்முறையாக டெஸ்ட்டில் அறிமுகமானார்.