ஆஸ்திரேலிய ரசிகர்களின் இன வெறி பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது - இந்திய அணி கேப்டன் விராட் கோலி கண்டனம்
Jan 11 2021 7:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான நிறவெறி சம்பவத்திற்கு விராத் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நிறவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். பவுண்டரி லைன்களில் இது போன்ற பலவித தாக்குதல்கள் நடக்கின்றன. இது அராஜகத்தின் உச்சக்கட்டம் - களத்தில் இவ்வாறு நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தை அவசரத்தோடும், தீவிரத்தோடும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.