சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை தவிர்க்குமா இந்தியா? - இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரர்கள் ஆட்டமிழப்பு
Jan 10 2021 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிட்னியில் நடைபெறும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியை தவிர்க்க இந்தியா போராடி வருகிறது. இன்றைய 4ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் எடுத்தன. இதன் மூலம் 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிக ரன்கள் குவித்தது. 6 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்திருந்தபோது, இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து மொத்தம் 406 ரன்கள் முன்னிலை பெற்ற அந்த அணி, இந்தியா வெற்றி பெற 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. எட்டிப்பிடிக்க முடியாத இந்த இலக்கை நோக்கி இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்த ரோஹித் சர்மா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்கவீரர் சுப்மான் கில்லும் 31 ரன்களுக்கு அவுட் ஆனார். நாளை ஒருநாள் எஞ்சியிருக்கும் நிலையில் 8 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள இந்தியா, மேற்கொண்டு 309 ரன்களை எடுத்து வெற்றி பெறுமா? அல்லது டிரா செய்ய போராடுமா? என்பது நாளைய ஆட்டத்தில் தெரிந்துவிடும்.