கரூர் மாவட்டத்தில் போலீசாருக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் சிறப்பு யோகா பயிற்சி
Jan 10 2021 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு சிரிப்பு யோகா பயிற்சி நடைபெற்றது. தாந்தோணி மலையில் உள்ள காவலர்கள் ஆயுதப்படை மைதானத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் சிறப்பு யோகா, மூச்சுப் பயிற்சி மற்றும் சிரிப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. மனவளக்கலை யோகா பேராசிரியர் திருமூர்த்தி தலைமையில் இந்த பயிற்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பகலவன் சிறப்பு யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார்.