சிட்னியில் நடைபெறும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா ரன் குவிப்பு - இந்தியா வெற்றி பெற 375 ரன்கள் இலக்கு
Nov 27 2020 1:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அங்கு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. பயணத்தின் முதல் கட்டமாக சிட்னியில் இன்று முதலாவது ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்சும், டேவிட் வார்னரும் களம் இறங்கினார்கள். இவர்கள் இருவரும் தொடக்கத்தில் நிதானத்தை கடைப்பிடித்து, அதன் பிறகு அடித்து விளையாட தொடங்கினர். இதனால் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா 100 ரன்களை கடந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஃபிஞ்ச் சதம் அடித்தார். டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் ஆஸ்திரேலியா 43 ஓவர்கள் முடிந்தபோது, 3 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்திருந்தது.