ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வி - 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
Oct 16 2020 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 31வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது. பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அணியின் ஸ்கோர் 78 ஆக இருக்கும்போது மயங்க் அகர்வால் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரின் அதிரடியான ஆட்டத்தால் பஞ்சாப் அணியை வெற்றியை நோக்கி வேகநடை போட்டது. அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் கிறீஸ் கெய்ல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நிகோலஸ் பூரன் சிக்ஸர் அடித்து பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.