வெற்றி ஆதிக்கத்தை தொடருமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி -ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர் கொள்கிறது
Sep 22 2020 8:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை அணி தனது 2-வது ஆட்டத்தில், ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சார்ஜாவில் நடைபெறுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில், கடந்த 19-ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், சென்னை அணி தனது 2-வது ஆட்டத்தில், ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர் கொள்கிறது. இந்தப் போட்டி, சார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
மும்பைக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதுபோல், ராஜஸ்தானுக்கு எதிராகவும் அபாரமான திறமையை வெளிப்படுத்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து குணம் அடையாத பிராவோ, இன்றைய போட்டியிலும் பங்கேற்க மாட்டார். ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் அணி, தொடக்க ஆட்டத்திலேயே வெற்றிபெறும் ஆர்வத்துடன் களம்காண உள்ளது.