பெண் நடுவர் கழுத்தில் பந்து பட்டு காயம் ஏற்பட்ட சம்பவம் - மன்னிப்பு கோரினார் முதல்நிலை டென்னிஸ் வீரர் ஜோகோவிச்
Sep 8 2020 10:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண் லைன் அம்பயர் கழுத்தில் பந்து பட்டு காயம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு, ஜோகோவிக் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில், உலகின் முதல்நிலை வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிக், தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் Pablo Carreno Busta-வை எதிர்கொண்டார்.
ஆட்டம் தொடங்கியது முதல் ஜோகோவிக் தடுமாற்றத்துடன் ஆடினார். இதனால் முதல் செட்டில் 5க்கு 6 என பின்தங்கிய நிலையில் இருந்த ஜோகோவிக், பந்தை தரையில் பின்னோக்கி வேகமாக அடித்தார். இதனையடுத்து, அந்த பந்து அங்கிருந்த பெண் லைன் அம்பயர் கழுத்தில் பட்டு அவர் காயமடைந்தார். இதனால் பதறிப்போன ஜோகோவிக், அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதுடன் நிலைமையை விளக்கிக் கூறினார்.
ஆனாலும் போட்டி விதிகளின்படி, அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஜோகோவிக் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை அவர் இழந்தார்.