ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியைக் காண 30 முதல் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி : ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் வாரியம்
Aug 2 2020 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை காண 30 முதல் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி கேட்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. அக்டோபர் 19-ந் தேதியில் இருந்து நவம்பர் 10-ந்தேதி வரை போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ரசிகர்கள் இன்றி போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம், 30 முதல் 50 சதவீத ரசிகர்களை மைதானத்திற்குள் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் முபாஷிர் உஸ்மானி கூறுகையில், இந்திய அரசின் அனுமதி கிடைத்து விட்டது என பி.சி.சி.ஐ தங்களுக்கு தெரிவித்த உடன், இதுகுறித்து தங்கள் நாட்டு அரசிடம் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது குறித்த அனைத்து முடிவுகளும் அரசை சார்ந்தது என அவர் தெரிவித்துள்ளார். அரசு இதற்கு அனுமதி தரும் என முபாஷிர் உஸ்மானி நம்பிக்கை தெரிவித்தார்.