வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - 289 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
Jul 29 2020 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தொடரை இரண்டுக்கு ஒன்று எனக் கைப்பற்றியது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும், இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. இந்நிலையில், கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது. இதைத் தொடர்ந்து 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது.
399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்தது. 4-வது நாள் ஆட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-வது இன்னிங்சில் 37 புள்ளி 1 ஓவர்களில், 129 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.