கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி - ஓராண்டுக்கான கவுண்ட் டவுன் டோக்கியோவில் தொடங்கியது
Jul 24 2020 10:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 365 நாள் கவுன்டவுன் தொடங்கியது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021 ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான புதிய அட்டவணை, கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், டோக்கியோவில் உள்ள கடிகாரத்தில், ஒலிம்பிக் போட்டிக்கான 365 நாள் கவுன்டவுன் தொடங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியாமல் போகக்கூடும் என்று, போட்டியின் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.