கொரோனாவுடன் போராடும் மருத்துவர்களே உண்மையான சாம்பியன்கள் - பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் உருக்கம்
Jul 5 2020 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனாவுடன் போராடும் மருத்துவர்களை உண்மையான சாம்பியன்கள் என பனாமா நாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை ஜாம்பவான் ராபர்டோ டுரன் பாராட்டியுள்ளார். அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராபர்டோ டுரன், தற்போது முழுமையாக மீண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடவுளின் கருணையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், கொரோனாவுக்கு ஜாம்பவான்கள், உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள், சமூக அந்தஸ்து, இனம், மதம் எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார். ஆறு முறை உலக சாம்பியன் பெற்றுள்ள ராபர்டோ டுரன், மருத்துவர்கள்தான் வாழ்க்கையின் உண்மையான சாம்பியன்கள் என புகழாரம் சூட்டியுள்ளார்.