பாகிஸ்தான் வீரர் ஹபீஸ்க்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதி - உண்மையை மறைத்ததற்காக ஒழுங்கு நடவடிக்கை
Jun 28 2020 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனியார் மருத்துவனையில் கொரோனா தொற்று இல்லை என தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹபீஸ்-க்கு, மீண்டும் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து செல்லும் 29 பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், முகமது ஹபீஸ், வகாப் ரியாஸ் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. முகமது ஹபீஸ் தனது திருப்திக்காக தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை முடிவு வந்தது. இந்நிலையில், ஹபீசுக்கு கொரொனா இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தனிமையில் இருக்காத அவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது.